கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக ஆரணி வரை அரசு பேருந்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
மேலும் அக்கோரிக்கைக் குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் அவர்களிடம் மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில். அவர்கள் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்த வழித்தடத்தில் 115P என்கிற புதிய பேருந்தை கும்மிடிபூண்டி பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து சிறிது தூரம் அவரே அப் பேருந்தினை ஓட்டிச் சென்றார்.
புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கியதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபார பொதுமக்கள் தமிழக அரசுக்கும் சட்ட மன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.