கும்பகோணம் அடுத்த தாராசுரம் முனியப்பன் நகரில் வசிக்கும் சித்திரைவேல் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் உட்பட சுமார் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்,
கும்பகோணம், செப். 29 –
கும்பகோணம் அடுத் தாராசுரம் முனியப்பன் நகரில் வசித்து வருபவர்கள் சித்திரைவேல், நந்தினி தம்பதியினர். சித்திரைவேல் ரயில்வேயில் பாயிண்ட் மேனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்து அன்று சித்திரைவேல் பணிக்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி தாயாரின் உடல்நிலைக் குறித்து விசாரித்து வர தனது வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார்.
அவரது தாயர் வீட்டுக்கு சென்று விட்டு வேலை முடித்து திரும்பி வரும் தனது கணவனுடன் சேர்ந்து வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த இரண்டரை லட்சம் மதிப்பிலான 5 சவரன் தங்க நகைகள் அரை கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 2000 ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தாராசுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.