ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட அண்ணனூரில் உடல் உபாதைக் கழிக்க சென்ற நபரிடம் கத்தியைக் காட்டி 3 சவரன் தங்கச் செயினைப் பறித்த 2 கொள்ளையர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருமுல்லைவாயில், செப். 29 –

ஆவடியை அடுத்த அம்பத்தூர் சோழம் பேடு இந்திரா நகரை சேர்ந்தவர்  சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த செப் 23-2021 அன்று இரவு 9 மணி அளவில் வேலை விஷயமாக வெளியில் செல்லும் போது அண்ணனூர் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் இயற்கை உடல் உபாதை கழிப்பதற்கு சென்றுள்ளார்.

 அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் சந்தோஷை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

 இது குறித்து உடனடியாக சந்தோஷ் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கத்தி முனையில் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற நபர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த பதிவுகள் அதில் இடம் பெற்றிருந்தது.

அதன் மூலம் அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டு இன்று காலை திருமுல்லைவாயில் சக்தி நகர் நடேசன் தெருவை சேர்ந்த கிருஷ்ணகாந் வயது 31 என்பதும், திருமுல்லைவாயில் எம்ஜிஆர் நகரைச் சார்ந்த பிரவீன் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சந்தோஷிடம் இருந்து பறித்து சென்ற 3 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணை முடித்தப் பின் அவர்கள் இருவரையும் இன்று அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு பொன்னேரி சிறையில் அடைத்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here