கும்பகோணம், ஜன. 9 –

கும்பகோணம் அருகே அணைக்கரையில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர்  யூகலிப்டஸ் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே  பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி  (26). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் கிருஷ்ணவேணி என்ற பெண் குழந்தை உள்ளது.

கிருஷ்ணமூர்த்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செப்டிக் டேங்க் கிளீனிங் உள்ளிட்ட துப்புரவு பணி செய்வதற்காக அனக்கரை அருகே உள்ள ஒழுகச்சேரிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று  மாலை குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தில் கிருஷ்ணமூர்த்தி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து திருப்பனந்தாள் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பனந்தாள் காவல்துறை வழக்கு பதிவு செய்து மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here