சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவிற்கான கொரியா நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்தித்துப் பேசினார். உடன் சென்னையிலுள்ள கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத்தூதர் யங் சுயோப் குவான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.