திருவாரூர், ஆக. 09 –

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள  பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள் அதற்கு கடைக்காரர் மறுப்பு தெரிவிக்கவே, நாங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்தான் எனவும், மேலும் கடன் தர அக்கடைக்காரரை தொடர்ந்து வற்புத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கடைக்கார ர் மற்றும் அவ்விரு நபர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருக் கட்டத்தில் ஆத்திரம் அடைந்த 19 வயதேயான ராகுல் மற்றும் வினோத் இருவரும் ஒன்று சேர்ந்து அக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, அக்கடை உரிமையாளர் கண்மணியையும் கடுமையாக தாக்கிவுள்ளனர்.

பொருளை இழந்தும், உடலில் காயங்கள் ஏற்பட்ட கண்மணி இப்பிரச்சினைக் குறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here