பாபநாசம், மார்ச். 19 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பங்களா தெருவைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் குணசேகரன், மேலும் இவரது மனைவி சுமதி என்பவர், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்று இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது.. மேலும் உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, ஊராட்சி மன்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து வந்ததாகவும் அதனால் அவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில், இவருக்கும் அவரது கணவர் குணசேகரனுக்கும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மனம் உடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி நேற்று முன் தினம் மாலை  அறையின் கதவை தாளிட்டு வீட்டில் இருந்த மண்ணெண்னையை தனக்குத்தானே உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து, கணவர் குணசேகரன் சுமதியின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிய மனைவி சுமதியை காப்பாற்ற முயன்ற போது அவரும் அத்தீயில் படுகாயம் அடைந்துள்ளார்..

அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும், மேல் சிகிச்சைக்காக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும்  படுகாயமடைந்த அவரது கணவர் குணசேகரன் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கபிஸ்தலம் காவல்துறை ஆய்வாளர்  அனிதா கிரேசி,  சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here