அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா 25% சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது. இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையையும் பெறவுள்ளது என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், செப் . 11 –
பட்டு சேலைகளுக்கு உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் பகுதியில் மத்திய, மாநில, அரசுகள் மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூபாய் 83 கோடியே 83 லட்சம் செலவில் கைத்தறி பட்டு பூங்கா அமைக்கும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு முதல் துவக்கப்பட்டது.
கைத்தறி பட்டு பூங்கா திட்டம் தொடங்கப்பட்டு 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தற்பொழுது பட்டுப் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கீழ்கதிர்பூர் கைத்தறி பட்டு பூங்காவில் 25% சதவிகித பணிகள் நிறைவு பெற்று நெசவாளர்கள் பட்டுச் சேலைகளை நெசவு செய்திட நெசவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கைத்தறி பட்டு பூங்கா வில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகளை கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த கைத்தறி பட்டு பூங்கா பணிகளை திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆய்வு செய்து பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று பட்டு கைத்தறி பூங்கா துவக்கி வைக்கப்படும் என அறிவித்து இருந்தோம்.
அதன்படி தற்பொழுது 25% சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் செப்டம்பர்15 தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் பூங்கா வை துவக்கி வைக்க உள்ளோம் அதற்கான பணிகளை இன்று ஆய்வு செய்துள்ளோம். கைத்தறி பட்டு பூங்கா மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 18 ஆயிரம் பேர் பயன் பெற உள்ளதாகவும்,
இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்படும் பட்டுப் பூங்கா என்ற பெருமையும் பெற உள்ளது என அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோதரன் பேசுகையில் எந்த ஒரு தொழிற்சாலை மூடப்பட்டாலும் தொழிலாளர்களை திமுக அரசு கைவிடாது என தெரிவித்தார்.