காஞ்சிபுரம், செப் . 18 –
காஞ்சிபுரத்தில் சுற்று சூழலில் ஏற்படும் மாசுவை கட்டுபடுத்த மாரத்தான் Young indian மற்றும் கிளைமைட் சேஞ் என்ற தலைப்பில் மாரத்தான் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் துவங்கிய சைக்கிள் மாரத்தான் பேருந்து நிலையம், ரயில்வே சாலை, வையாவூர் சாலை, களியனூர், முத்தையால்பேட்டை, பெரியார் நகர் வழியாக 50-க்கும் மேற்பட்டோர் 15 கிலோ மீட்டர் சென்ற விழிப்புணர்வு காஞ்சிபுரம் காந்தி சாலையில் நிறைவு பெற்றது
நாட்டில் பெட்ரோல், டீசல் பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் சுற்று சூழல் கடுமையாக பாதித்து வருகின்றது. இதனால் பறவைகள், மரங்கள், இயற்கை வளங்கள், மனிதர்கள் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த மாசுவை தடுக்க அனைவரும் பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல் பேட்டரி வாகனங்களை பயன்படுத்த வலியுறுத்தி இந்த மாரத்தான் விழிப்புணர்வு நடைபெற்றது.