காஞ்சிபுரம், மார்ச். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பி உயர்த்தி நடந்து சென்றவாரு காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) திமுக வேட்பாளராக க.செல்வத்தை மூன்றாவது முறையாக திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக இன்று சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் வருகை தந்த திமுக வேட்பாளர் செல்வத்திற்கு, வாலாஜாபாத் திமுகவினர் மாலை அணிவித்து பேண்டு வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட திமுக வேட்பாளர் செல்வம்  உடனடியாக பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு இரவெனவும் பாராமல் இரவோடு இரவாக வாலாஜாபாத் முக்கிய நகர் பகுதியில் சாலை வழியாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய கோரி இரு கை கூப்பி உயர்த்தி சாலையில் நடந்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here