காஞ்சிபுரம், ஜூலை. 27 –

இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் முதல் முதலாக மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைப்பெறுகிறது அப்போட்டி எதிர்வரும் 28 ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஒட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜோதி ஓட்டத்தை பேண்டு வாத்தியம், மற்றும் மேல தாளங்கள் முழங்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

இந்த ஜோதி ஒட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி மேட்டு தெரு, மூங்கில் மண்டபம் என காஞ்சிபுரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் காவல்துறையினர் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இந்நிகழ்ச்சி தொடங்கும் வரை இடை  விடாமல் கன மழை ஒருபுறம் பெய்துக் கொண்டேயிருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here