காஞ்சிபுரம், ஜூன். 05 –
அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை பாதுகாத்திடவும் 500 மரகன்றுகள் நடும் பணி முதற் கட்டமாக துவங்கப்பட்டது
இந்த மரகன்றுகள் நடும் விழாவில் கிராம பொதுமக்கள் தனியார் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் விரைவில் 1 லட்சம் மரகன்றுகளை நட தேவேரியம்பாக்கம் ஊராட்சி திட்டமிட்டுளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு பெருந்தலைவர் தேவேந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் சேகர், தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.