கும்பகோணம், ஏப். 02 –

கும்பகோணத்தில் மத்திய அரசின் மோசமான  மக்கள் விரோத நடவடிக்கையால்  நாளுக்கு நாள் உயர்ந்து வரும், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் சுங்கச்சவடிகளில் வசூலிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் உச்சி பிள்ளையார் கோவிலிருந்து சிலிண்டருக்கு படை கட்டியும், சமையல் எரிவாயுவை பெண்கள் சுமந்து கொண்டும்,  ஆட்டோ இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து பேரணியாக சென்று காந்தி பூங்கா முன்பு பாடை கட்டி எடுத்து வந்த சமையல் எரிவாயு முன்பு ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி மாநகர மாமன்ற உறுப்பினர் செல்வம் மாதர் சங்க பொறுப்பாளர்கள் தனலட்சுமி, சுமதி, ஜோதி சுமதி மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here