PIC FILE COPY

கலசபாக்கம் ஜூலை.25-

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொற்குணம் மதுரா காரப்பள்ளம் கிராமத்தில் புதியதாக 2 வகுப்பறைகளை கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் காசியம்மாள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) விஜயலட்சுமி, ஒன்றிய உதவி பொறியாளர் அருணா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here