கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா இன்று நடைப்பெற்றது . அதில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர் படைப்புத்திறன், படைப்பினங்கள்,கல்விஞானம், இயற்கை இன்றியமையாதது என்பதுக் குறித்து சிறப்புரை ஆற்றினார் .

ராமநாபுரம், ஜூலை 10-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32வது மாணவ பேரவை துவக்க விழா வெகு விமர்சையாக நடந்தது.
        தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில்  32 வது மாணவப் பேரவைத் துவக்க விழா இன்று காலை11 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இறை வணக்கத்துடன் துவங்கிய இவ் விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை யாற்றினார். மாணவப் பேரவை ஆலோசகர்கள் திருமதி இராஜேஸ்வரி உதவிப் பேராசிரியை கணிதத்துறை, மற்றும் திருமதி இம்ரானா உதவிப் பேராசிரியை வணிகவியல் துறை ஆகிய இருவரும் மாணவப் பேரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்தார்கள். திரு.ஷேக் மிர்ஷா யாவர் பேக், நிறுவனர், மற்றும் தலைவர் யாவர் பேக் அசோசியேட்ஸ் மற்றும் ஊக்க மூட்டும் பேச்சாளர், வாழ்க்கை பயிற்சியாளர், ஒருங் கிணைப்பாளர், ( ஹைதராபாத், தெலுங்கானா, இந்தியா ) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இறையாற்றல், படைப்புத்திறன், படைப்பினங்கள், கல்விஞானம் இயற்கை இன்றியமையாத தாக நம் வாழ்க்கைத் தளத்தில் இருந்து நமக்கு பேருதவி செய்கின்றன போன்ற ஊக்கமூட்டும் கருத்துக்களை மாணவிகளுக்கு கூறினார். இவ் விழாவில் சீதக்காதி அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் சிராஜிதீன், அலாவுதீன் ஹைதர்,செய்யது நூர் முகம்மது, செய்யது அசீம்கான்,கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள், தேர்வாணையர், பல்துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக எஸ்.ஜீஹி ஆமினா  மாணவப் பேரவை செயலாளர் மாணவி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது. இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் ஷேக் தாவூத்கானும், மாணவப் பேரவை ஆலோசகரும் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here