பொன்னேரி, ஆக. 04 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் மீது 2 ஆண்டு சிறை தண்டனைக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில், இன்று அத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனைக் கொண்டாடும் விதத்தில் பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர்கள்.

நிகழ்ச்சிக்கு பொன்னேரி நகர தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.எல். சதாசிவலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோவர்தன், மாவட்டத் துணைத் தலைவர் குணசேகரன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும், ஜான், பாலாஜி, தியாகராஜன், நாகராஜன், ஜெய்சங்கர், விமல்ராஜ், திருவருட்செல்வன், அறிவழகன், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு கொண்டாடினர்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here