தஞ்சாவூர், ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ….

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்கு நீங்கள் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. வேட்பாளர் முரசொலியை குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அப்படி வெற்றி பெற வைத்தால், மாதம் இருமுறை இந்த தொகுதிக்கு நான் நேரடியாக வந்து உங்கள் கோரிக்கையை 100%  தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன். தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கோடி மதிப்பீட்டில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும். தஞ்சையில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டைட்டல் பார்க் அமைக்கப்படும். பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் கம்பன் விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படும். பட்டுக்கோட்டை – மன்னார்குடி புதிய ரயில் பாதை உருவாக்கப்படும். கலைஞரின் திட்டங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை  உருவாக்கப்படும்.பத்தாண்டு ஆட்சி செய்த மோடி தமிழகத்திற்கு என்று எதுவும் செய்யவில்லை.

ஒரு வேலையை‌ எடுத்தால் அதனை  வெற்றிகரமாக முடித்து விட்டு சந்தோஷமாக சிரிக்க வேண்டும். ஆனால் பழனிச்சாமி சிரிப்பது அடிமை சிரிப்பு. ஜால்ரா சிரிப்பு. OPS யை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவார். மோடியை பார்த்தால் தரையோடு தரையாக படுத்து விடுவார். அமித்ஷாவை பார்த்தால் குட்டிக்கரணம் அடிப்பார். சசிகலாவை பார்த்தால் என்ன செய்வார் என்று உங்களுக்கே தெரியும். பழனிச்சாமி போல் நான் பச்சோந்தி கிடையாது. ஒன்றிய பிரதமரை பெயரை சொல்லி அழைக்க வேண்டாம். இனிமேல் அவரை 29 பைசா என்று அழைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here