சென்னை ஆக. 31 –

கோரமான சாலை விபத்தில் தனது மகன் கருணா சாகரை பறிகொடுத்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி ஆறுதல் சொல்வது என வினா எழுப்பி தனது துயரத்தை வெளிப்படுத்தும் வகையில், அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது இரங்கல் செய்தியில் ஆறுதல் கூறிவுள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கழகத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் அவர்களின் மகன் கருணாசாகர் பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோர விபத்துக்கு தன் அன்பு மகனைப் பறிகொடுத்திருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய் பிரகாஷ் அவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை என அதில் குறிப்பிட்டுவுள்ளார். மேலும் அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த இரங்கல் செய்தியில் கூறிவுள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here