இராசிபுரம், ஜூன். 29 –
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அடுத்த மேலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிப்புரிபவர் காந்திமதி ( 55 ) இந்நிலையில் இன்று அவர் தனது இளையமகள் செளமியாவை ஸ்கூட்டியில் ( இருசக்கர வாகனம் ) அழைத்துக் கொண்டு சேலம் நோக்கிச் சென்றுள்ளார்.
இராசிபுரம் அடுத்த சேலம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வந்த போது, TVS XL வாகனத்தில் எதிரே வந்த ராசிபுரம் தெக்கடி தெருவைச் சேர்ந்த பொறிக்கடை ஊழியர் சந்தோஷ்குமார், 26 நேருக்கு நேராக மோதியுள்ளார்.
இந்த விபத்தில் காந்திமதிக்கு தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார். சந்தோஷ்குமாருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. செளமியாவுக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. இருவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தோஷ்குமார் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியது விபத்துக்கு காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
காந்திமதியின் கணவர் முருகேஷன் சேலம் கூட்டுறவு மாவட்ட பதிவாளராக உள்ளார். இவர்களுக்கு மீனா, செளமியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.