திருவாரூர், ஜூலை. 14 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதியன்று இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கான வருசை பொருட்கள் எடுத்து வந்து திரளாக கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் மாலை மாற்றும் வைபவம் மற்றும் அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் அழைக்கும் வைபவமும் நடைபெற்றது. இராதா மாதவ திருக்கல்யாண வைபவம் மாங்கல்ய தாரணத்துடன் நடைபெற்றது.

இவ்விழாவினை டாக்டர் உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின் சார்பாக விக்னேஸ்வர பூஜை, தோடையமங்கலம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, தரங்கம், பூஜைகள், தியானம், திவ்யாநாமம், டோலோட் ஸவம், உஞ்சவ் ருத்தி போன்ற ஐதீகமுறைகள் நடத்தப்பட்டு    ஸ்ரீ இராதா கல்யாணம், ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவ விடையாற்றி நடைபெற்றது‌.

தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சென்னை மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஏரளமான பக்தர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here