குடவாசல், செப். 08 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நகரில் உள்ள சேங்காலிபுரம் சாலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ சொர்ன மகா காளியம்மன், தொட்டிச்சி அம்மன், ஜுரஹதீஸ்வரர், அக்கியப்பர் ஆகிய தெய்வங்களுக்கு இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
15 வருடங்களுக்கு பிறகு நடைப்பெறும் இவ்விழாவிற்காக ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டும் வர்ற கலாபங்கல் செய்தும், இதற்கான தொடர்பணிகள் திங்கட்கிழமை முதல் துவங்கியது அதில் கோபூஜை, திரவ்ய ஹோமங்கள் நடைபெற்று இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்காம் கால மகாபூர்ணாஹூதியுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து சரியாக காலை 11 மணிக்கு விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து முலவர் தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் தீபாராதனை காட்டப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு மஹாபிஷேகம் காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை திருப்பணி குழு நாட்டாண்மைகள், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கீழ அடிச்சேரி தெருவாசிகள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். சர்வசாதகமாக சேங்காலிபுரம் சிவஸ்ரீ சிவாச்சாரியார் குழுவினர் ஆலய அர்ச்சகர் பாலு ஆகியோர் இவ்விழாவிற்கான யாக சாலை பூஜைகள் மேற் கொண்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதானம் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.