கும்பகோணம், பிப். 24 –

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து வந்த நிலையில் இன்று அக்கோரிக்கையினை நிறைவேற்றும் விதாமக பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு செல்லக் கூடிய புதிய பேருந்து சேவையை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இன்று கும்பகோணம் மாநகரைச் சுற்றி அமைந்துள்ள காலை 9 நவக்கிரக கோவிலுக்கு செல்வதற்காக போக்குவரத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், புதிய பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார். அப்போது அரசு தலைமை கொறடா கோவி செழியன், பந்தநல்லூர் பகுதிக்கு 2 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட போக்குத்துறை அமைச்சர் புதிய பேருந்து சேவையை தொடங்குமாறு அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனரிடம் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து பந்தநல்லூரில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்து சேவையை மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆகியோர் புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அந்நிகழ்வில் அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மகேந்திர குமார், தொமுச தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கோ.க அண்ணாதுரை, மிசா மனோகரன்,  உதயச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜி கே எம் ராஜா, மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாவட்ட பிரதிநிதி பாலகுரு, மாவட்ட ஊராட்சிகள் உறுப்பினர் இளவரசி சின்னசாஷி, ஒன்றிய அவைத் தலைவர் ஜெயபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் நளினிசண்முகவேல், ஒன்றிய துணை செயலாளர் சாமிநாதன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here