பொன்னேரி, பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியமனோபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அமுமக சார்பில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் அவ்விழாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி. ஆர்.மன்ற செயலாளரும், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் பி.ராம்குமார் தலைமை வகித்தார். மேலும் மாவட்ட பொருளாளர் பி. ஜி.ராஜேஷ், மனோபுரம் பி. ஜி.விஜயகுமார், கிளைக் கழக அவை தலைவர் வி. முனுசாமி, கம்மாவார் பாளையம் ஊராட்சி செயலாளர் எம்,முனுசாமி, கிளை செயலாளர் முருகன்,  கிளைகழக பிரதிநிதி கஸ்தூரி,  பொருளாளர் ஏழுமலை உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை நிறுவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மேலும் அப்பகுதியில் அமமுக கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து அங்கு கூடியிருந்த ஏழை எளியோர்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

சிறப்பு மிகு விழாவில் ரெட்டிப்பாளையம் முன்னாள் கூட்டுறவு சங்கத் இயக்குனர் சுகுமார், உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here