கும்பகோணம், பிப். 7 –

கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக  கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. உச்சி பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிபிரியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அங்கிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு முக்கிய வீதி வழியாக மகாமக குளக்கரையில் நிறைவு அடைந்தது. இந்த அணிவகுப்பில் கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஜெயச்சந்திரன், பிருந்தா, துணை கண்காணிப்பாளர்கள் அசோகன், வெற்றிவேந்தன், பூரணி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள்  அழகேசன், பேபி, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் காவல்துறையினர், ஆயுதப்படை காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here