பொன்னேரி, மார்ச். 15 –

பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.வி.சங்கர்ராஜா தலைமையில்  நடைப்பெற்றது. இதில் ஏராளமான கட்சித்தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும், பி.வி. சங்கர் ராஜா தலைமையில் திரண்ட தொண்டர்கள் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர்  பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்கள்  சுரேஷ், முனிரத்தினம் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சூர்யா .எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அன்பு. மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதி. சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் வத்சலா. இளைஞரணி செயலாளர் ஜான்சன் .மெரட்டூர் விக்னேஷ். பொன்னேரி தயாளன் ஓடை வாசு உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அமமுகவின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவான இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி புஷ்பா. மஞ்சு. ஷீபா .உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அமமுகாவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவ்விணைப்பு விழாவையும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here