செங்கல்பட்டு, ஏப். 01 –

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியான பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240-ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260-ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 325- ரூபாயில் இருந்து 375-ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395- ரூபாயில் இருந்து 455-ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய கட்டண வசூல் நேற்று நள்ளிரவு 12-மணி முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் அதனைத்தொடர்ந்து அச்சுங்கசாவடியில் நேற்றை விட இன்று அதிகாலை முதல் கூடுதலாக 10-ரூபாய் முதல் 60-ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here