சென்னை, அக், 4 –

சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க விரும்பும் அனைவரும் , பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சிப் பெற்ற ஆண்,பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துக் கொள்ளலாம்.

முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப் படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப் படுவர்.

அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி அல்லது தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி பெற ஆலோசனை வழங்கப் படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மான்ய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் மூலம் நிதிவுதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதியுதவி பெறும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்குப் பெறலாம்.

இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும்.

எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன் பெறும் வழி வகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு ;

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொலைப்பேசி மற்றும் கை பேசியில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

எண்கள் ; 044-22252082,22252082, 8668102600, 9444557654

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here