துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் எலீனா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் நவரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை சுவிட்சர்லாந்தின் பென்சிக் 4-6, 6-4 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் பிலிஸ்கோவாவை தைவானின் ஹஷ்யேயை தோற்கடித்தார். இதேபோல் அரைஇறுதிக்கு குவிட்டோவா (செக்குடியரசு) தகுதி பெற்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here