சென்னை, மே. 08 –

இன்று, சென்னை மாநகரட்சி மண்டலம் 14 க்கு உட்பட்ட உள்ளாகரம் புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா காப்பகத்தில் உள்ள சுமார் 71 முதியவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.

அம்முகாம்களில் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு என்ன மாதிரியான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவும், தடுப்பூசி செல்லுத்திக் கொள்பவர்களின் விவரங்களை முறையாக உடனே பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தொடர்ந்து அதே பகுதியில் மற்றொரு இடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி செலுத்துவது குறித்து மாநகராட்சி மருத்துவ குழுவினரிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினருடன் சென்னை மாநகராட்சி 14வது மண்டலக்குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன், 14வது மண்டல உதவி ஆணையர் சீனிவாசன், திமுக வட்ட செயலாளர்கள் ஜெ.திவாகர், வழக்கறிஞர் குமாரசாமி, 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன், 185வது வார்டு மாமன்ற உறுப்பினர் சர்மிளாதேவி திவாகர், உள்ளிட்ட திமுகவினர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here