ஆலந்தூர்:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கியது. அந்த கட்சி இன்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை தங்களுடன் கூட்டணி வைக்க மிரட்டுகிறது.
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. கூட்டணிக்காக பிரதமர் மற்றும் மத்திய-மந்திரிகள் தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலத்துக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடியும், மத்திய மந்திரிகளும் என்ன செய்தாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி குறித்து தமிழிசை பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here