காஞ்சிபுரம், ஜூலை. 09 –
காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம் சுற்றுப்புற தேசத் தூய்மைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற் கொண்டனர். தொடர்ந்து பிரச்சார வாசகங்கள் அடங்கிய பலகையினை கையில் ஏந்தியபடி அவர்கள் பேரணியாக சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி நிபவ் கடற்கரை தூய்மைபணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர்.
இந்நிகழ்வினை நடத்திட அதன் முதன்மை செயல்பாட்டு மேலாளர் எஸ்.குமார், மேலாளர். லெட்சுமி பிரவீன், உதவி மேலாளர். ராகுல் உள்ளிட்டவர்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், வழிநடத்தியும் இத்தூய்மை பணியினை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.