சென்னை, டிச. 14 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமுற்ற காவலர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.