இராசிபுரம், ஜூலை. 20 –

இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் – 2022 போட்டிகள் நடக்க உள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த, 2000க்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் நேரடியாக பார்க்க, சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட, தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி,  மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து ஈ.ஓ.,ரவிக்குமார் தலைமையில், சந்தைப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஒலிம்பிக் விவரங்கள் குறித்த, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், டவுன்பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் செஸ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதை,  ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து செல்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here