காஞ்சிபுரம், ஜூலை, 28 –
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று வேலை நிறுத்தம் செய்து வாலாஜாபாத் பேரூராட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களை பழிவாங்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கும் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் கைவிட கோரியும், அமைதியை உருவாக்க காவல்துறை மற்றும் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க கோரியும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பெயர் பலகை அருகே புதியதாக போட்டி பெயர் பலகை வைத்துள்ள திமுக சங்க பெயர் பலகையை அகற்றக் கோரி அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தினார்கள்.