பொன்னேரி, செப். 07 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள பரணம்பேடு அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவினை தொடர்ந்து முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோபுரம் மற்றும் பரிவார தேவர்களுக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவினை காண வந்த பக்தகோடிகள் மீது கோபுர கலச நீர் தெளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பரணம்பேடு கிராம மக்கள் இளைஞர்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.