தஞ்சாவூர், ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..

தஞ்சையில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் ஒவ்வொரு நாளும் சுவாரசியமான பிரச்சாரத்தை செய்து வருகிறார் அவரது பிரச்சாரம் என்றாலே நகைச்சுவைதான்..

தஞ்சை திலகர் திடலில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார் பின்பு பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் என்னடா என்று சுவாரசியம் எதுவும் இல்லை என்று மக்கள் பார்க்க பொதுக்கூட்டம் முடிந்து வெளியே வந்த தேமுதிக வேட்பாளர் சிவனேசன் பிரச்சாரம் நடந்த இடம் எதிரே வடைகடை ஒன்று பார்த்தார் உடனே அந்த வடக்கடையை நோக்கி சென்று தங்களது தொண்டர்களுக்கு  வடை கடையில் வடை சுட்டு தானே வினியோகம் செய்தார்.

இந்த வீடியோவும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here