ராசிபுரம், ஏப். 14 –

வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூர் திமுக சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது.

இதில் ஒன்றிய கழகப் பொறுப்பாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான RM.துரைசாமி, அத்தனூர் பேரூர் கழக பொறுப்பாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான K.கண்ணன், அத்தனூர் பேரூராட்சி தலைவர் R.சின்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு அண்ணலின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்வில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கேசவபெருமாள், ரேவதி, கிருத்திகா சீனிவாசன், பரமேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் அமெரிக்கா பாலு, கென்னடி, செங்கோடன், பழனிசாமி, முத்துசாமி, விஜயகுமார், ஆரோக்கியராஜ், சேகர், ரஜினி, கோவில் மணி, குணாளன், துரைசாமி, அருண்குமார், டிராவிட் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவ நாளை கொண்டாடினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here