தாரங்கம்பாடி, மே. 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

தரங்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில்  மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த முகமது ஷகில், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தரங்கம்பாடி வழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது மெயின் ரோடு பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் வாகனம் மீது மோதியதில் மூன்று பேரும் தலை நசுங்கி பரிதாபமாக சம்பவயிடத்திலேயே பலியாகினார்கள்.

மேலும் அவ்விபத்தில் தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் படுகாயம் அடைந்தார்.. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொறையார் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டதுடன் காயமடைந்தவரை மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும் அச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் மற்றும் அடையாளம் தெரியா வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவ்விபத்தில் பலியானவர்கள் யாரென்ற முகவரி குறித்த விபரங்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here