தஞ்சாவூர், ஜூன். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுபடுத்த தவறி விட்டதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் பலிக்கு பொருப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். எனவும், மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here