சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் அவர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயின்று வருகிறார். இந்நிலையில் அவர், கண்டபேருண்டாசனம் எனும் யோகாசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில், 40 முறை சுழன்று சாதனை படைத்தார்.
மேலும் அவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் ,வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்,அசிஸ்ட் உலக சாதனை,ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி மைத்ரா விற்கும் அவருக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் சந்தியா ஆகியோருக்கு பாராட்டுகள் அப்பகுதி மக்களிடம் இருந்து குவிந்து வருகிறது.