சீர்காழி, மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும் அப்போராட்டில் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் மற்றும் திரளான விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி சிறிது தூரம் பேரணியாக வந்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது சட்ட நகலை  எரிக்க முயன்ற விவசாயிகளை, அப்பொது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயற்சித்தனர்.

அதனை மீறி விவசாயிகள் தீர்மான நகலை எரிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் விவசாயிகளிடம் இருந்து அந்நகலை பிடுங்கி அணைத்தனர்.

அதன் பின்னர்  போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  கோரிக்கை மனு அளித்தனர்.

 

பேட்டி –

வேட்டங்குடி சீனிவாசன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here