அம்பத்தூர், ஏப். 10 –

மாதவரம் பால்பண்ணையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் சுமார் 43 வயதுடைய விஜயகுமார் இவர் சம்பவ நாளான இன்று மதியம் ஒரு மணியளவில் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார்.

அப்போது அவர் பணம் எடுத்து செல்வதை அறிந்த மூன்றுபேர் கொண்ட கும்பல் அவரை மதுரவாயலில் இருந்து பின்தொடர்ந்து வந்துள்ளனர். தொடர்ந்து வந்த கும்பல் அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்பாலத்தில் வைத்து அவரை வழிமறித்து அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முற்பட்டுள்ளனர். முடியாததால் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் அவரது கை, கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இடை விடாது வெட்டிவுள்ளனர். இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு ஆபாத்தான நிலையில் விஜயகுமார் கீழே விழ, அச்சமயம் அவர் எடுத்து வந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை பொதுமக்கள் பார்த்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அத்தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமி, கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here