திருவாரூர், ஜன. 30 –

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரப்பகுதியைச் சேர்ந்த மடப்புரத்தில் வசித்து வருபவர் 30 வயது நிரம்பிய புறாவிஜய் என்கின்ற விஜய் மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில், இன்று திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணைக்காக விஜயை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவர்மறைத்து வந்திருந்த எலி மருந்தினை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விஜயை உடனடியாக போலீசார் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விஜயிடம் எப்படி எலி மருந்து இருந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here