செங்கல்பட்டு, ஏப். 02 –

தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில் இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் திரளானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் மத்திய நெடுஞ்சாலை துறை சுங்க கட்டணம் உயர்த்தி வருகின்றது. இதற்க்கு கன்டணம் தெரிவித்தும், சுங்க கட்டணம் உயர்வை திரும்ப பெற கோரியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன மற்றும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here