நன்னிலம், பிப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்….

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மேலும் அக் கலந்தாய்வுக் கூட்டத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது ? என்பதுக் குறித்தும் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு குறித்தும் விரிவாக உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் அக்கூட்டம் அகஸ்டின் அன்புராஜ் தலைமையிலும், நாடாளுமன்ற செயலாளர்   தமிழ்வாணன் முன்னிலையும், நடைப்பெற்றது. மேலும் அக் கூட்டத்திற்கு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்  மற்றும் மருத்துவர் பாரதி செல்வன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தனர். மேலும் அக்கட்சியின் 50 க்கும் மேற்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர  தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here