சிவகார்த்திகேயன் படங்களில் பிசியாக நடித்தாலும், கனா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார்.
இதில் ரியோவுடன் ஆர்ஜே விக்னேஷ், நாஞ்சில் சம்பத், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணிகள் புகைப்படங்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.