ஆரணி:

ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.

ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து எரித்து தப்பிச்சென்று விட்டனர்.
இன்று காலை கொடிக்கம்பம் எரிக்கபட்டிருப்பதை கண்ட விடுதலை சிறுத்தையினர் ஆரணி-பூசிமலைக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எங்கள் கட்சிகொடியை சேதப்படுத்திய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here