மீஞ்சூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ராமமூர்த்தி, மரகதம், விஜயம், ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் உள்ளிட்டவர்கள் அவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்
சிறப்பு மிகு அவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார்.
விழாவின் நிறைவாக பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் 516 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அச்சிறப்பு மிகு விழாவில் உதவி தலைமை ஆசிரியர்கள் ரஜினிகாந்த், செந்தமிழ் ராஜ், சசிகுமார், ஆசிரியர் ரஞ்சிதம், உடற்கல்வி ஆசிரியர் ஜோதி, ராஜேஷ் கண்ணா, பவானி, உள்ளிட்ட ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெற்றோர்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.