சென்னை:

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் பதவி விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதவி விலகலால் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பதில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என்று தெரிகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here