மீஞ்சூர், மே. 18 –

சென்னை மாநகராட்சி 19வது வார்டு உட்பட்ட பெரிய மாத்தூரில் அமைந்துள்ளது புத்தர் கோவிலில் தவோ அமைப்பின் சார்பில் பகவான் புத்தரின் 2566 வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோயிலில் குருநாதர் என்.நாகராஜன்  தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநில தலைவர் இ.மெய்யழகன் .திமுக.19 வட்ட செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர.

இந்நிகழ்ச்சியில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அட்டவணை வகுப்பினர் நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன் .செயலாளர் ஜி.ம் ராஜா.  நிர்வாகிகள் லோகநாதன். ராஜகோபால்  .மற்றும் கோபு.போர்ட் அருணகிரி . ஆவின்ஆறுமுகம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாத்தூர் கிளை துணைச்செயலாளர் எம். நாகராஜன்.ஜெயலட்சுமி. கோமதி.அருணா. நாராயணன் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் குழந்தைகளும் கலந்துகொண்டு பகவான் புத்தரை வழிபட்டனர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here